வணக்கம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2023 ஆரம்பித்து இரண்டு வாரமாகப் போகுது, இப்போதுதான்
இவளுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லத் தோணுதோ என்று நினைப்பீர்கள். என்ன செய்வது,
இப்புத்தாண்டை கோவிடோடு அல்லவா கொண்டாட நேர்ந்துவிட்டது! கடந்த மூன்று வருடங்களாக
அந்தா இந்தா என்று போக்குக்காட்டி அதனிடமிருந்து ஓரளவு தப்பித்து வந்திருந்தோம். அதற்கு
மேலும் தப்பிக்க முடியாதபடி 2022 கடைசியில் கணவருக்கும், 2023 துவக்கத்தில்
எனக்கும் வந்துவிட்டது. விலா எலும்பே விட்டுப்போவது போல கடுமையான இருமலும்
காய்ச்சலும் உடம்பு வலியுமாக பாடாய்ப்படுத்திவிட்டது. மருத்துவரின்
பரிந்துரையின்பேரில் antiviral
மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டோம்.
நல்லவேளையாக தடுப்பூசிகளும் இரண்டு பூஸ்டர்களும் போட்டிருந்தோம். அப்படி இருந்துமே
இவ்வளவு சிரமம் என்றால் தடுப்பூசி போடாதவர்களின் நிலையை நினைத்தாலே நடுக்கமாக
உள்ளது. எப்படியோ நல்லபடியாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம். அம்மட்டில்
நிம்மதி.
மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள 2022-ல் கவனம் பெற்ற நூல்கள் தொகுப்பில் சென்ற வருடம் கனலி பதிப்பகம் வாயிலாய் வெளியான ‘மழைநிலாக் கதைகள்’ என்ற ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூலும் இடம்பெற்றிருக்கிறது. இது நான் எதிர்பாராததொரு அங்கீகாரம்.
தற்போது
நடைபெறும் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இந்த இரு நூல்களும் கனலி
பதிப்பகத்தின் பிற நூல்களும் கிடைக்கும் அரங்குகள்:
பரிதி
பதிப்பகம் - 432
பரிசல் புத்தக
நிலையம் -171-172
பனுவல் புத்தக
நிலையம் - 199-200
குட்டி ஆகாயம்
- 533
பூவுலகின்
நண்பர்கள் - 642 - 643
காக்கைக் கூடு-
589-590
கோதை பதிப்பகம் அரங்கு எண் - 303
நூல்களை வாங்கி ஆதரவளிக்குமாறும் வாசித்துக் கருத்தினைப்
பகிர்ந்து ஊக்கமளிக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.