15 January 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய நூல்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். 

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழா முடிவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ளன.  என்னுடைய முதல் நூலான 'என்றாவது ஒரு நாள்' என்னும் மொழிபெயர்ப்பு நூல் அகநாழிகை பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது என்பதையும் புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் மற்ற நூல்களோடு இதுவும் கிடைக்கிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அகநாழிகை பதிப்பகத்தின் அரங்கு எண் 304. 







அகநாழிகைப் பதிப்பகத்தின் வெளியீடுகள் - 
2013, 2014 மற்றும் - ஜனவரி 2015

கவிதைகள் 
விரல் முனைக் கடவுள் - ஷான் (ரூ.80)
சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர் (ரூ.70)
மௌன அழுகை - மு.கோபி சரபோஜி (ரூ.70)
மலைகளின் பறத்தல் - மாதங்கி (ரூ.80)
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - க.இராமசாமி (ரூ.60)
என் வானிலே - நிம்மி சிவா (ரூ.50)
யுகமழை - இன்பா சுப்ரமணியன் (ரூ.70)
கவிதையின் கால்தடங்கள் (50 கவிஞர்களின் 400 கவிதைகள்) - தொகுப்பாசிரியர் : செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.230)
அன்ன பட்சி - தேனம்மை லட்சுமணன் (ரூ.80)
சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன் (ரூ.80)
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி (ரூ.80)
தனியள் - தி.பரமேசுவரி (ரூ.100)
அவளதிகாரம் - வசந்த் தங்கசாமி (ரூ.200)
சிவப்பு பச்சை மஞ்சள் வௌ¢ளை - செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.70)
மணல் மீது வாழும் கடல் - குமரகுரு அன்பு (ரூ.70)
ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - உமா மோகன் (ரூ.70)
அக்காவின் தோழிகள் - நீரை. மகேந்திரன் (ரூ.60)
தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார் (ரூ.90)

சிறுகதைகள்
சுனை நீர் - ராகவன் ஸாம்யேல் (ரூ.110)
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - இராய. செல்லப்பா (ரூ.120)
அடை மழை - ராமலக்ஷ்மி (ரூ.100)
குறுக்கு மறுக்கு - சிவக்குமார் அசோகன் (ரூ.70)
முப்பத்தி நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) - தமிழில் : புல்வெளி காமராசன் (ரூ.120)
சக்கர வியூகம் - ஐயப்பன் கிருஷ்ணன் (ரூ.80)
வற்றா நதி - கார்த்திக் புகழேந்தி (ரூ.120)
அம்மாவின் தேன்குழல் - மாதவன் இளங்கோ (ரூ.130)
என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்) - ஹென்றி லாசன் - தமிழில் : கீதா மதிவாணன் (ரூ.150)

கட்டுரைகள்
வெயில் புராணம் - உமா மோகன் (ரூ.25)
கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குரூஸ் படைப்புலகம்) தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி (ரூ.240)
யாருக்கானது பூமி? - (சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள்) பா.சதீஸ் முத்து கோபால் (ரூ.140)
பேயாய் உழலும் சிறுமனமே - இளங்கோ டிசே (ரூ.150)

நாவல்
நுனிப்புல் - வெ.இராதாகிருஷ்ணன் (ரூ.130)

**********************************************

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய ஐரோப்பியக் குடியேறிகளின் அன்றைய மாறுபட்ட வாழ்க்கைச்சூழலை மையமாய்க் கொண்டு புனையப்பட்ட ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் என் முயற்சிக்கு ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நன்றி.


அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்.