25 June 2019

நிழலோடு நித்தம் சமர்





(1)
சுவர்தொட்டுத் திரும்பும்
குழந்தையைத் துரத்துகிறது நிழல்
ஓடிப்பிடித்து விளையாட்டு.

(2)   
எந்தப்பக்கம் விழுவது
திகைப்பில் நிழல்
எல்லாப்பக்கத்திலிருந்தும் ஒளி.

(3)
பிடித்தபிடி விடவில்லை
நிழலின் கரத்தை நிஜம்
இருள்பயம்.

(4)
நடந்து நடந்து
ஆயாசமானது நிழல்
அசையாதிருந்தது பாறை.

(5)   
இருள்கவியத் தொடங்கியதும்
சட்டெனத் தழுவிக்கொள்கின்றன
நிழல்கள் ஒன்றையொன்று.

(6)
நிஜத்தின் பின்னே
ஒளியும் நிழற்குழந்தை
ஒளிக்கூச்சமாம்.

(7)
வெயில் சுமந்து சுமந்து
வெளுத்துப்போனது குடை.
வெளுக்கவில்லை நிழல்.

(8)
இருளில் மடிந்து
ஒளியில் உயிர்க்கும்
நிழலோடு நித்தம் சமர்.

(9)
விரட்டினாலும் விலகாது
கால்பற்றி இறைஞ்சுகிறது
போக்கிடமற்ற நிழல்.

(10)
ஒளியில் ஒளியும் நிழல்
நிழலில் ஒளியும் நிழல்
ஒளியில் ஒளியும் ஒளி

******

15 comments:

  1. அனைத்துக் குறுங்கவிதைகளும் பிரமாதம்.

    ரசிக்கவும் புன்னகைக்கவும் வைத்தன :)!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  2. குட்டி குட்டி பூக்கள் ,,ரசிக்க வைத்தன ...

    நிழல் என்னும் மூன்றேலுத்தின்

    பல பரிணாமங்கள்

    ஒளிக்கு உள்ளேயும்

    ஒளிக்கு வெளியேயும்

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னூட்டத்துக்கு நன்றி அனு.

      Delete
  3. குறுங்க் கவிதை ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி கோமதி மேடம்.

      Delete
  4. Replies
    1. ரசித்தமைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  5. கவிதைகள் அனைத்தும் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  6. ரசித்தேன் கீதா. சின்னச் சின்னப் பூக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மிகவும் நன்றி தோழி.

      Delete
  7. அத்தனையும் அருமை. மிக மிக ரசித்தோம்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.