10 February 2014

ஒப்பேற்றுதலும் ஒரு வாழ்வாமோ?




ஒல்லுமோவென்று ஓயாத்தயக்கமேலிட
ஒன்றுஞ்செய்யாமல் ஒதுங்கிநின்று
ஒப்பேற்றுதலும் ஒரு வாழ்வாமோ?

வெறும்பேச்சிலே வீரமணைத்துங்காட்டி
செயல்தனிலே சுணக்கங்காட்டுவாரோடு
இணக்கங்கொள்வாரும் இச்சகத்திலுண்டோ?

எள்ளளவும் முயலாது, என்னாலிது இயலாதென
வெள்ளத்தில் மூழ்கும் வேளையிலும் கைகட்டி
வேதாந்தம் பேசி வீழ்வாரும் உண்டோ?

துடிப்புள்ளவனுக்குத் துரும்புமாயுதமாமென்றே
வருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,
வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? 



39 comments:

  1. வாழும் வழி சொன்னவிதம் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒன்றுஞ்செய்யாமல் ஒதுங்கிநின்று
    ஒப்பேற்றுதலும் ஒரு வாழ்வாமோ?

    பலநேரங்களை அப்படித்தான் கடக்கவேண்டியுள்ளது ..!

    ReplyDelete
  3. சோம்பேறிகளுக்கான சாட்டையடிக் கவிதை!

    ReplyDelete
  4. வள்ளுவர் காலத்துச் சொல்லை (ஒல்லுதல்) இந்த காலத்து தனது கவிதையில் எடுத்தாண்ட சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரியும் அழகு! அருமை!
    வாழ்த்துகள் தோழி!

    ReplyDelete
  6. முயற்சி திருவினையாக்கும் என்ற பதத்தின் பொருளை உணர்த்தி
    நிற்கும் சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    தோழி .

    ReplyDelete
  7. துடிப்புள்ளவனுக்குத் துரும்புமாயுதமாமென்றே
    வருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,
    வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
    வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? //
    அருமை.

    ReplyDelete
  8. Anonymous10/2/14 22:53

    வணக்கம்
    கவிதையின் ஒவ்வொரு வரிகளும் என் மனதில் தித்திக்குது.... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம 5வத வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. வாய்சொல் வீரர்களுக்கு நல்ல பாடம் மேடம்!

    ReplyDelete
  10. முயற்சி திருவினையாக்கும் முயற்சி உடையார் இலழ்ச்சி அடையார். நல்லதோர் பதிவு ரசித்தேன்

    ReplyDelete
  11. Anonymous11/2/14 08:04

    ''..வருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,
    வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
    வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? ...''
    அருமையான கவி வரிகள் .
    அசத்துகிறீர்கள் போங்கள்!.
    மனமினித்த வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. உளிதாங்கும் கற்களே சிலையாகும்..
    வலிதாங்கும் நெஞ்சமே சபையேறும்...
    சோர்வினை எரியூட்டி
    நம்பிக்கை முனை பிடித்து
    முயற்சியை வினையூக்கியாக்கும்
    முட்டிமோதும் நெஞ்சமே
    பின்னாளில் அரசாளும் -- என இயம்பும்
    அற்புதமான கவிதை சகோதரி...

    ReplyDelete
  13. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :

    அன்பின் பூ - இரண்டாம் நாள்

    ReplyDelete
  14. நல்ல கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  15. //துடிப்புள்ளவனுக்குத் துரும்புமாயுதமாமென்றே

    வருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,

    வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே

    வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? //

    அழகும் அருமையானதுமான பொன் வரிகள்!! இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    ReplyDelete
  16. உண்மை தோழி .பலர் இப்போது ஒப்பேற்றிக்கொண்டு தான் வாழ்கிறார்கள் .கவிதை நன்று

    ReplyDelete
  17. வல்லமை வேண்டும் விழைவை தருகிறது கவிதை

    ReplyDelete
  18. @திண்டுக்கல் தனபாலன்

    உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  19. @இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  20. @கவிப்ரியன் ஆர்க்காடு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிப்ரியன்.

    ReplyDelete
  21. @தி.தமிழ் இளங்கோ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  22. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  23. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  24. வல்லாளனாய் வாழ்ந்திட வேண்டுமென்ற முனைப்பை மனதில் பதித்திட்டது கவிதை! வெகுஜோர்!

    ReplyDelete
  25. @பால கணேஷ்

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

    ReplyDelete
  26. @கோமதி அரசு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  27. @ஸ்ரீராம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  28. @2008rupan

    வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரூபன்.

    ReplyDelete
  29. @Mythily kasthuri rengan

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.

    ReplyDelete
  30. @G.M Balasubramaniam

    தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  31. @kovaikkavi

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  32. @மகேந்திரன்

    அழகான ரசனைமிகுந்த, ஆழமான பொருள்புதைந்த கவிப்பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  33. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  34. @மனோ சாமிநாதன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  35. @Geetha M

    வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி கீதா.

    ReplyDelete
  36. @நிலாமகள்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.