14 December 2013

ஒருவேளை...




நானே புரிந்துகொள்ள இயலாத
சில திரைமறைவு ரகசியங்களை
விளக்கப்படாத விவரங்களை
ஒருவேளை
உனக்கு நான் புரியவைக்கக்கூடும்.

உன் பார்வை துளைத்த
வினாக்களுக்கான விடைகளை
ஒருவேளை..
என்றேனும் நான் உனக்குக் கையளிக்கக்கூடும்.

உள்ளுக்குள் பின்னிப் பின்னி
குமைந்துகொண்டிருக்கும் கனவுகளின்
முறுக்கிழைச் சிக்கல்களை
ஒருவேளை…..
என்றேனும் நான் எளிதாய் விடுவிக்கக்கூடும்.

மின்மினிகள் சிதறிக்கிடக்கும்
நிலாக்கால இரவுகளில்
கையோடு கை பிணைத்திருந்த
அத்தருணங்களோடு மற்றுமிரண்டை
ஒருவேளை….
நான் மறுபடியும் பெறக்கூடும்.

நான் காணும் சொப்பன உலகின்
கண்கவர் காட்சியழகை
மனமயக்கும் மாட்சியழகை
ஒருவேளை
உன்னையும் நான் காணச்செய்யக்கூடும்.

திருப்பமொன்று வந்துவிட,
இணைந்திருந்த நாமிருவரும்
தனித்தனியாய் ஆனோம் என்னும்
அந்த கசப்பான உண்மையை
ஒருவேளை
நான் பொய்யென மறுக்கவும் கூடும்.

*******************

(கமலேஷ் பாண்டே அவர்கள் எழுதிய ‘காஷ்என்னும் இந்திக்கவிதையின் தமிழாக்கம். அதீதம் இதழில் வெளிவந்தது.)
படம்: நன்றி இணையம்.

50 comments:

  1. மொழிப்பெயர்ப்பு மிகவும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இந்த ' ஒருவேளை ' என்ற சொல்லில்தான் எத்தனை
    எத்தனை அர்த்தங்கள்.!

    ReplyDelete
  3. வேலையிடையே 'ஒரு வேளை ' நான் வராமல் போயிருந்தால் இந்த அழகான கவிதையை ரசிக்க முடியாமல் போயிருக்குமோ?

    ReplyDelete
  4. அற்புதமான உணர்வு பூர்வமான கவிதை
    தமிழாக்கம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சிறப்பான மொழிபெயர்ப்பு அருமை.

    ReplyDelete
  6. அருமையான வரிகள்..!

    அதீதம் இதழில் வெளிவந்தது. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அருமை. கடைசி பாரா விளக்குகிறது ஆசைக் கனவுகளின் காரணத்தை.

    ReplyDelete
  8. வணக்கம்
    கவிதையின் வரிகள் மிக உணவு மிக்கவை. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-.

    ReplyDelete
  9. வணக்கம்
    கவிதையின் வரிகள் மிக உணர்வு மிக்கவை. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-.

    ReplyDelete
  10. வணக்கம்
    த.ம 4வது வாக்கு


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-.

    ReplyDelete
  11. //நான் காணும் சொப்பன உலகின்
    கண்கவர் காட்சியழகை
    மனமயக்கும் மாட்சியழகை
    ஒருவேளை…
    உன்னையும் நான் காணச்செய்யக்கூடும்.//

    மிகவும் ரஸித்தேன். அருமையான தமிழாக்கம். இனிமையான சொல்லாடல்.

    அதீதம் இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  12. சிறப்பான மொழிபெயர்ப்பு.. பாராட்டுகள்..

    ReplyDelete
  13. ஒருவேளை என்றான உணர்வோலை மிக அருமை!

    உணர்வும் மெருகும் அப்படியே வருமாறு
    மொழியாக்கம் செய்வதில் மிகத் திறமைசாலிதான் நீங்கள்!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.5

    ReplyDelete
  14. தங்களின் மொழியாக்கமும் கவிதையும் கண்டு பெருமைப்படுகின்றேன் .
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  15. கசப்பான உண்மையை எதிர்கொள்ள முடியாவிட்டால் அதை பொய் என்று கூறுவதிலும் மக்ழ்ச்சி இருக்கலாம். (நான் புரிந்து கொண்ட விதத்தில் )

    ReplyDelete
  16. சுவையாக உள்ளது! மொழி பெயர்ப்பு!

    ReplyDelete
  17. தாங்கள் ரசித்ததை
    ரசனை குறையாமல்
    யாமும் ரசிக்கும் படி!
    நேர்த்தியான மொழிபெயர்ப்பு !!
    நினைவைவிட்டு அகலா
    மொழிபெயர்ப்பு !!

    ReplyDelete
  18. இரசித்தேன்! அருமை! நன்றி!

    ReplyDelete
  19. நல்ல கவிதை. அருமையான தமிழாக்கம்.

    ReplyDelete
  20. ஒருவேளை பலரும் பயன்படுத்தும் சொல்லே ஆனாலும் கவிதைப் பரிமளிக்கும் போது இத்தனை வண்ணத்தைக் காட்டி விடுகின்றது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  21. அருமையான கவிதை கீதமஞ்சரி..... வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. நல்ல கவிதை...
    திருப்பத்தின் திடீர் முடிவு நினைவில் நிற்கும்..

    ReplyDelete
  23. அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளுறையாக சோகத்தைகாட்டுகிறது.நன்றி

    ReplyDelete
  24. திருப்பமொன்று வந்துவிட,
    இணைந்திருந்த நாமிருவரும்
    தனித்தனியாய் ஆனோம் என்னும்
    அந்த கசப்பான உண்மையை
    ஒருவேளை…
    நான் பொய்யென மறுக்கவும் கூடும்.///
    மறக்கவும் கூடுமோ...!

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  25. @திண்டுக்கல் தனபாலன்

    முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  26. @ஸ்ரவாணி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

    ReplyDelete
  27. @உஷா அன்பரசு

    அழகானப் பின்னூட்டம். ரசித்தேன். மிக்க நன்றி உஷா.

    ReplyDelete
  28. @Ramani S

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  29. @Ramani S

    நன்றி ரமணிசார்.

    ReplyDelete
  30. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  31. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  32. @ஸ்ரீராம்.

    சரியான புரிதல். நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  33. @Rupan com

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  34. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  35. @ADHI VENKAT

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  36. @இளமதி

    உங்கள் பாராட்டு இன்னும் உத்வேகம் தருகிறது. நன்றி இளமதி.

    ReplyDelete
  37. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  38. @G.M Balasubramaniam

    மிகச்சரி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  39. @புலவர் இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  40. @Mythily kasthuri rengan

    தங்கள் வருகைக்கும் ரசித்துமகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மைதிலி.

    ReplyDelete
  41. @Seshadri e.s.

    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

    ReplyDelete
  42. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  43. @சந்திரகௌரி

    தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சந்திரகௌரி.

    ReplyDelete
  44. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  45. @ஆறுமுகம் அய்யாசாமி

    தங்கள் வருகைக்கும் படித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  46. @Mathu S

    தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  47. @Geetha M

    வருகைக்கும் நேரிய புரிதலுக்கும் மிக்க நன்றி கீதா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.