29 January 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் - 2



உயர்நிலைக்கல்வி என்பது ஏழாம் வகுப்பிலிருந்து ஆரம்பம். மொத்தம் எட்டுப் பாடங்கள்.  ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற அடிப்படைப் பாடங்களும், கலை, சமூகவியல், தொழில்நுட்பம், மொழி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற தொழிற்கல்விப் பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன.ஆங்கில வகுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. தாய்மொழியாக ஆங்கிலத்தைக் கொண்டவர்களுக்கு அதீதமாகவும், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாய்க் கொண்டவர்களுக்கு மிதமாகவும் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. ஐந்து தொழிற்கல்விப்பாடங்களிலும் பல பிரிவுகள் உண்டு. அவற்றை பொருள் பிறழாமல் தரும் நோக்குடன் ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். எல்லாப் பள்ளிகளிலும் எல்லாப்பிரிவுகளும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும் பெரும்பாலான பள்ளிகள் பெரும்பாலான பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பத்துக்கு ஒன்பது பள்ளிகள் இந்த முறையில்தான் கல்வியைப் போதிக்கின்றன. 

1.தொழில்நுட்பம் (Technology) :

1.   Introduction to IT

2.   Advanced IT

3.   Woodwork

4.   Metal craft

5.   Food and culture

6.   Experience with food

7.   People and food

8.   Cake mixing and decoration

9.   Social occasions

10. Gourmet food

11. Textiles

12. Creative crafts and character

13. Aviation A&B

14. robotics


2. மொழி -LOTE ( Language Other Than English)

1.   Japanese A

2.   Japanese E

3.   Japanese

4.   French A

5.   French E

6.   French

7.   Chinese Mandarin

(A – Accelerated, E – Extension)


3. கலை (The Arts):

1.   General art

2.   Drawing

3.   Advanced drawing

4.   Costume and set design

5.   Ceramics

6.   Sculptures

7.   Painting

8.   Print making

9.   Experimental art

10. Drama

11. Media studies

12. Music

13. Advertisements and business graphics

14. Architecture domestic

15. Architecture commercial

16. Visual communication & design

17. Photography

18. Graphics


4. சமூகவியல்(social studies):

1.   Australian History

2.   American History

3.   Asian History

4.   Current issues & global studies

5.   Australian Geography

6.   Environmental geography

7.   Teenagers and law

8.   Money matters

9.   Work life

10. Movies

11. Mind & Meaning


5. சுகாதாரம் மற்றும் உடற்கல்வி (Health & Physical Education)

1.   Human sexuality

2.   Health & Lifestyle

3.   Child development studies

4.   General P.E.

5.   Advanced P.E.

6.   Racquet sports

7.   Handball games

8.   Stickball games

9.   Football games

10. Power sports

11. Sports coaching

12. Leisure studies

13. Outdoor ed. A&B

14. Individual movement

15. Life saving

16. psychology


மேற்குறிப்பிட்ட ஐந்து பிரிவுகளிலிருந்தும் பிரிவுக்கு ஒன்றாக ஐந்து பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆறு மாதங்கள் (ஒரு செமஸ்டர்) படிக்க வேண்டும். எதையெதைத் தேர்ந்தெடுப்பது என்பது மாணவனின் விருப்பம். அடுத்த ஆறு மாதங்களுக்கு வேறு ஐந்து பாடங்கள்.ஒருமுறை தேர்ந்தெடுத்தவற்றை மறுமுறை தேர்ந்தெடுக்க இயலாது. படிப்பு என்பது, கோட்பாடு, செய்முறை, செயலறிவு அதற்கான வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இப்படிப் படிப்பதால், பத்தாம் வகுப்பு முடித்த ஒரு மாணவனுக்கு கிட்டத்தட்ட நாற்பது வெவ்வேறு விதமான தொழிற்கல்வியில் பரிச்சயம் உண்டாகியிருக்கும் 

வெறும் ஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்கள் உணர்கின்றனர். கண்முன் விரிந்திருக்கும் மாபெரும் உலகில் வாழ இத்தனை வழிகள் இருக்கின்றன என்பதையும் உணர்கின்றனர். ஒரு வேலை போனால் இன்னொன்று என்று வாழமுடியும் என்னும் நம்பிக்கை கொள்கின்றனர். வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்திலிருந்து அறிவுபூர்வமாக வெளியேறுகின்றனர். சுய விருப்பத்துடன் தங்கள் பாதையைத் தாங்களே தேர்வு செய்து மனநிறைவு பெறுகின்றனர் 

இது போன்ற வாய்ப்புகள் வழங்கப்படாதவரை ஒருவர் தன்னிடம் இருக்கும் திறமையை தானே அறிய இயலாமல் போய்விடுகிறது. இதுவரை ஒரு மாணவன் தான் படித்த பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ரிப்போர்ட்களின் அடிப்படையில் அவனுக்கு எதில் அதிக நாட்டம் என்பதும் எதில் அவன் முழுத்திறமையும் வெளிப்படுகிறது என்பதும் தெரியவந்திருக்கும். இந்தப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம் முக்கியமில்லை. மாணவர்களின் திறனைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்வதும், அத்திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்குவதுமே ஆசிரியரின் வேலை.  

பத்தாம் வகுப்பில் மாணவர்களைப் பாடாய்ப் படுத்தும் பொதுத்தேர்வு இல்லை என்பதும் வியப்பான உண்மை. பத்தாம் வகுப்பு முடிந்ததும், பள்ளி மாணவர்களில் பாதிபேர் பள்ளியை விட்டு விலகுகின்றனர்.  ஒரு மாணவன் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டம் இது. படிப்பில் அதிக நாட்டமிருக்கும் பிள்ளைகள் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள, தொழிற்கல்வியில் நாட்டமிருக்கும் பிள்ளைகள் பள்ளியை விட்டு விலகி, தொழிற்கல்விக் கூடத்தை நாடுகின்றனர். அதனால் மேற்படிப்பான மருத்துவம், பொறியியல் போன்றத் துறைகளில் தேவையற்ற போட்டிகள் தவிர்க்கப்படுகின்றன. அவற்றுக்குத் தேர்வு செய்யப்படும் மதிப்பெண் வெட்டு விவரத்தை பின்வரும் பதிவுகளில் பதிகிறேன் 

தொழிற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்ற மாணவர்கள் ஒன்றிரண்டு வருடங்கள் முறையாகப் பயின்று பட்டயம் பெற்று தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்கின்றனர். பெரும்பாலும் பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ, வீட்டை விட்டு வெளியேறும் தருணமும் இதுவே.

 கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து

ஆத்தவிட்டே பறந்து போயிடுத்து

 என்பதுபோல் சுயமாய் சம்பாதிக்கத் துவங்கும் பதினெட்டு வயதில் அவர்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத் தனித்துத் துவங்குகின்றனர். குடிக்கவும் புகைக்கவும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட வயது அது. இரவு நேர கேளிக்கைகளுக்கும் உல்லாச வாழ்வுக்கும் பெற்றோரின் வீட்டில் இடம் இல்லை என்பதால் அவர்கள் நண்பர்களுடனோ தனித்தோ வாழ்கின்றனர்.


மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடியும்வரை அரசின் உதவித்தொகை தொடரும். பெற்றோர் அனுமதித்தால் அவர்கள் தொடர்ந்து பெற்றோருடன் தங்குவர். அல்லது வெளியே தங்கி, பகுதி நேர வேலை செய்து அந்த வருமானத்தைக் கொண்டு தங்கள் மேலதிக செலவுகளைக் கவனித்துக் கொள்வர். இனி அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். 

நம் நாட்டில் இந்த நிலை இல்லையென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து வாழ்க்கையில் செட்டிலான பின் தாய் தந்தையரைக் கைகழுவி விடும் நிலைதான் பல இடங்களில் காணப்படுகிறது. வளரும் பிள்ளைகளைக் கைவிட்ட பெற்றோரைக் காண்பதரிது. படிப்பு மட்டுமல்ல, அதன்பிறகும்  வேலை, திருமணம் என்று பிள்ளைகளைத் தம் தோளிலேயே சுமக்கின்றனர் பெற்றோர். ஆண்பிள்ளையாய் இருக்கும்பட்சத்தில் வேலையில்லையென்றால் சில வீடுகளில் சரியான மரியாதை கிடைக்காது. வேலை தேடுவதில் மும்முரமாயில்லை என்று திட்டும் கிடைக்கும். ஆனாலும் பெற்றோர் தங்கள் கடமையை செய்யத் தவறுவது இல்லை 

ஆஸ்திரேலியா போல் எல்லாத் தொழில்களும் சமமாகப் பார்க்கப்பட்டு, வருமானமும் நிகராக இருந்தால், ஒருவேளை, தங்கள் பிள்ளைகள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் மனமுவந்து வரவேற்கும் நிலை இந்தியாவிலும் இருந்திருக்கும். இங்கோ படித்தவனுக்கு சமுதாயத்தில் இருக்கும் மரியாதையும் அந்தஸ்தும் படிக்காதவனுக்கு இருப்பதில்லை. மேல்நிலையில் உள்ளவனுக்கு இருக்கும் மதிப்பு கடைநிலையில் இருப்பவனுக்கு இருப்பதில்லை.

 ஆஸ்திரேலியாவில் உழைப்புக்குத்தான் மதிப்பே தவிர அவன் படித்தவனா இல்லையா என்பதில் இல்லை. அதேபோல் என்ன வேலை பார்க்கிறாய் என்பது பிரச்சனை இல்லை. வேலை பார்க்கிறாயா என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் ஒரு கட்டுமானப் பொறியாளரும், உணவகத்தில் எடுபிடிவேலை செய்பவரும் திருமணம் செய்துகொள்ள முடிகிறது. ஒரே பள்ளியில் மருத்துவரின் பிள்ளையும், தச்சரின் பிள்ளையும், சாலைப்பணியாளரின் பிள்ளையும் ஒன்றாகப் படிக்க முடிகிறது. வீட்டில் சகல வசதிகளையும் அனுபவிக்க முடிகிறது. காரணம், உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதையும், அதற்கேற்ற வருமானமும் 

இங்கு பழுதுபட்ட ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை பழுதுபார்க்கக் கொடுக்கும் தொகைக்கு சற்றே கூடுதல்தான் ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டி! கைப்பை, செருப்பு இவற்றைத் தைக்கக் கொடுப்பதிலும் புதிதாய் வாங்கிவிடலாம். எல்லாம் தனிமனித உழைப்புக்குக் கொடுக்கப்படும் ஊதியம் 

அந்த மரியாதையும் வருமானமும் நம் நாட்டிலும் எல்லா கடைநிலை ஊழியர்களுக்கும் தரப்பட்டால் தன் பிள்ளை இந்தப் படிப்புதான் படிக்கவேண்டும், இந்த வேலைதான் பார்க்கவேண்டும் என்று எந்தப் பெற்றோரும் வற்புறுத்த மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதில் நாட்டமோ அதில்தான் மேம்படுத்த முனைவர். நாளை தன் மகனோ மகளோ கஷ்டப்படக்கூடாது என்று பெற்றவர் நினைப்பதில் தவறில்லையே. அந்தக் கவலை மேலைநாட்டுப் பெற்றோர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இது உன் வாழ்க்கை. அதில் வரும் பிரச்சனைகளை நீயேதான் சமாளிக்கவேண்டும் என்பதே அதிகபட்ச அறிவுரை. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக வருந்தி வருந்தி சேமிப்பதோ, குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைக் கண்டிப்பதோ, அவர்களுடைய அந்தரங்கத்தில் தலையிட்டு ஆலோசனை வழங்குவதோ இல்லை.

 பெரும்பாலானோர் வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவிக்கின்றனர். சம்பாதிப்பதும், அனுபவிப்பதுமே அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோள். நாம் அப்படியில்லை. தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் மும்முரத்தில் நம் வாழ்க்கையை வாழத் தவறிவிடுகிறோம். நம் கனவுகளின் மேல் பெற்றோரின் கனவுகள் திணிக்கப்படுகின்றன.  நசுக்கப்பட்ட நம் கனவை மேலெழுப்பி, நம் பிள்ளைகளின் கனவின் மேல் அழுத்தி அதை மூர்ச்சையாக்குகிறோம். நாளை அக்கனவுகள் மேலெழும். அவன் பிள்ளைகளை இம்சிக்கும் 

அவரவர் கனவுகளை அவரவர் வாழ்க்கையிலேயே மெய்ப்படுத்திவிட்டால் காலம் காலமாய் அழுத்தத்தின் பிடியில் அகப்பட்டு அவை அடுத்தத் தலைமுறையின் முதுகு மேல் சவாரி செய்யத் தேவையில்லை. இந்தத் தலைமுறையிலாவது நாம் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் காலந்தவறிய அந்தக் கணக்கை நேர் செய்யமுடியும். நம் பிள்ளைகளை அவர்கள் விரும்பிய துறையில் அனுமதிப்போம். அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காவிடினும், தடுக்காமல் இருப்போம் 

பெற்றோர் மனம் மாறினாலும் கல்வித்துறையில் மாற்றம் வராதவரை மாணவர்களின் கனவு நனவாகும் சாத்தியம் வெகு குறைவே.


இன்னும் சொல்வேன்.


45 comments:

  1. நீங்கள் பகிர்ந்துள்ளவற்றின் மூலம் பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். பள்ளிகளில் அதுவும் உயர்நிலைப் ப்ள்ளியிலேயே பாடங்களைத் தெரிந்தெடுக்கும் உரிமை. இந்த முறை நல்லாயிருக்கு. இதுபோல் அமெரிக்காவின் கல்விமுறையையும் அறிய ஆவல்.அதனைப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் எனது மெயிலுக்கு அனுப்பவும். c.marimuthu1@gmail.com மேலும் பல தகவல்களுக்கு காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. எனது facebookலும் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  3. super, and from this, i have some new idea to make my teaching best thank you geetha.

    ReplyDelete
  4. super, and from this, i have some new idea to make my teaching best thank you geetha.

    ReplyDelete
  5. உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதையும், அதற்கேற்ற வருமானமும்.

    நினைக்கவே இனிமையாக இருக்கிறது..

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா போன்ற நடைமுறைகள் தான் இருக்கின்றது. லண்டன் வித்தியாசமாக இருக்கின்றது. ஆனால் இங்கெல்லாம் அவரவர் தகுதிக்கு ஏற்ற வேலை எடுக்கக் கூடியதாக இருக்கின்றது. இலங்கையும் எதிர்காலத்தில் இப்படியே வரும் என்று நான் நினைக்கின்றேன். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அர்மையான பதிவு. தாம் வாழுகின்ற நாட்டின் வழமைகளை எடுத்துக் காட்டுவது ஒவ்வொரு எழுத்தாளனுடைய கடமையுமாகும். வாழ்த்துகள்
    http://kowsy2010.blogspot.com/2012/01/blog-post_29.html

    ReplyDelete
  7. ஆங்கிலேய நாடுகளில் கல்வி/வேலைத் திட்டங்கள் பிரமாதமாக இருக்கின்றன. அதனால்தான் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கீங்க. நிறைய விவரங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

    ReplyDelete
  8. Nice to know about education system there. I felt it similar to here in some ways. Well detailed info, thanks

    ReplyDelete
  9. அருமை. பல விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  10. இவ்வளவு சிறப்பாக பாடத் திட்டங்கள் இருந்தும்
    பண்பில், குணங்களில் , பாசத்தில் , சுய நலம் இல்லாமல் இருப்பது ஆகிய வற்றில் ஆஸ்திரேலியர்கள்
    சுமாராகவே இருப்பது ஏனோ

    ReplyDelete
  11. பெற்றோர் மனம் மாறினாலும் கல்வித்துறையில் மாற்றம் வராதவரை மாணவர்களின் கனவு நனவாகும் சாத்தியம் வெகு குறைவே.
    >>
    கல்வித்துறையில் மாற்றாங்களை விரைவில் கொண்டு வந்தால் இந்தியா பிழைக்கும் என்று என் நம்பிக்கை. முயல்வார்களா? அரசியல்வியாதிகள்

    ReplyDelete
  12. @ விச்சு,

    தங்கள் ஆர்வத்துக்கும் நல்லெண்ணத்துக்கும் பாராட்டுகள். எனக்கு அமெரிக்கக் கல்விமுறை பற்றி எதுவும் தெரியவில்லை. என் பிள்ளைகள் ஆஸ்திரேலியாவில் படிப்பதால் இங்கிருக்கும் கல்விமுறை பற்றி ஓரளவு தெரிய வருகிறது. அதையே பகிர்கிறேன். மேலும் தெரிந்துகொண்டு பகிர்வேன். தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. முகப்புத்தகப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  13. @ இயற்கைசிவம்,
    தங்களுக்கு இப்பதிவின் மூலம் சிறு நன்மை உண்டாகியிருந்தாலும் அதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  14. @ இராஜராஜேஸ்வரி,

    உண்மைதான். உழைப்புக்கு மதிப்பளிக்கும் நாடு, வளம்பெறும். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  15. @ சந்திரகௌரி,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்னும் பாரதியின் வாக்குப்படி என்னால் முடிந்ததைக் கொணர முயன்றிருக்கிறேன். தங்கள் ஊக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. @ ஹூஸைனம்மா,
    ஆம், வேலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலையே எல்லாவகைக் கல்வியையும் ஊக்குவிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

    ReplyDelete
  17. @ அப்பாவி தங்கமணி,
    உண்மைதான். பெரும்பாலும் மேலைநாடுகளில் கல்வித்திட்டம் ஒத்ததாகவே இருக்க வாய்ப்புள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனா.

    ReplyDelete
  18. @ வடுவூர் குமார்,

    தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  19. @ ராம்ஜி_யாஹூ

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    பெரும்பாலும் மேலைநாடுகளில் உறவுகளுக்குள் பந்தபாசத்துக்கு அதிக இடமில்லை. அது குறையென்று சொல்லமுடியாது. அதுதான் அவர்களது வாழ்க்கைமுறை. அதனால்தான் அவர்களால் வாழ்க்கையை அதன்போக்கில் அனுபவிக்க முடிகிறது. திருமணம், பிள்ளைகள், பெற்றோர் என்று எந்தக் கட்டுக்குள்ளும் அகப்படாக் காரணத்தால்தான் அவர்களால் உயிரைத் துச்சமாக வைத்து பல சாதனைகள் செய்யமுடிகிறது. விட்டேத்தியாக வாழ்வது அவர்களுக்கு மனநிறைவு தருகிறது. கூடிவாழ்வதும், ஒருவருக்கொருவர் பற்றுடன் வாழ்வதும் நமக்கு மனநிறைவைத் தருகிறது.

    ஒற்றைக்குழந்தையும், ஓய்ந்த வயதில் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவைப்பதும் நம் நாட்டிலும், அதே போன்று ஒரு பற்றற்ற நிலையைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குகிறது.

    மற்றபடி பண்பில், குணத்தில் நான் பழகியவரை ஆஸ்திரேலியர்களைக் குறை சொல்ல இயலவில்லை. அதைப் பற்றியும் பிறகு ஒரு பதிவில் தெளிவிக்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  20. @ ராஜி,
    எதை வைத்து லாபம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் அரசியல்வாதிகள். அவர்களைப் பொறுத்தவரை கல்வி என்பதும் ஒரு வியாபாரம். அதில் லாபநோக்கற்று செயல்படக் கூடிய நிலை உருவானால்தான் கல்வியின் தரம் உயரும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    ReplyDelete
  21. Anonymous2/2/12 11:46

    திரு. ராம்ஜி,

    எத வெச்சு, இப்படி சொல்றீங்க. எதாவது குறிப்பான சம்பவம் இருக்கா.
    இந்தியன் Media-லெ ஆஸ்ட்ரல்யா பத்தி சொல்ரத வெச்சு முடிவு பண்ணாதீங்க.
    நாங இங்க தான் ரொம்ப வருஷமா இருக்கொம்...
    இங்க இருக்க Indiansவிட, நீங்க சொல்ற பண்புல, குணத்துல, பாசத்துல , ஆஸ்ட்ரல்யா மக்கள் எவ்வளவொ தேவல...
    நல்லா பழகுவாங்க .. உதவி செய்வாங்க

    ReplyDelete
  22. மிகவும் சிந்திக்க வைத்து விட்டீர்கள்.
    நம் நாட்டில் சிந்திக்கும் பழக்கம் அதிகம் இல்லாததால் கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது ;-)

    அருமையான பதிவு.

    வணக்கம்

    ReplyDelete
  23. சிந்திக்க வைக்கும் சிறப்பான தகவல்கள். உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதையும், அதற்கேற்ற வருமானமும்.
    நினைக்கவே இனிமையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. Anonymous2/2/12 14:50

    எத்தனை எத்தனை அருமையான தகவல்கள்
    அதனைச் சார்ந்த தங்களின் நற்சிந்தனைகள்
    ஆஸ்திரிலேய கல்விமுறை குறித்து தாங்கள்
    பகிர்ந்து உள்ளீர்கள் தோழி. மிக்க நன்றி !
    நாம் எல்லாம் இங்கு இன்னும் மதில் மேல் பூனையாக
    அனைத்திலும் , யாராவது அவதாரபுருஷன் தோன்றுவார்கள
    என்று எதிர்பார்த்துக் கொண்டும் வீண் கலாச்சார போர்வையில்
    பயந்து போர்த்திக் கொண்டும் உள்ளோம். நினைக்கவே
    வேதனையாக உள்ளது. தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  25. அடேயப்பா ! எத்தனை விதப் பாடங்கள் ! விரும்பியதைத் தேந்தெடுக்க எத்தனை வாய்ப்புகள் ! நம் நாட்டில் சில பாடங்கள் மட்டுமே . அவற்றிலும் நினைவாற்றலுக்கே முதன்மை இடம் . அந்த நிலையை நாம் எய்த 200 ஆண்டுகள் ஆகலாம் .

    ReplyDelete
  26. கீதா...குருதட்சணைக்குப் பிறகு உங்கள் பதிவுகளை என் முகப்பில் காட்டவில்லை.ஏன் என்று தெரியவில்லை.நீங்கள் பதிவுகள் போடவில்லையென்றுதான் இருந்தேன்.தற்செயலாக இந்தப் பக்கம் வந்தபோதுதான் இரு பதிவுகளைக் கண்டு கேள்விக்குறியோடு தொடர்கிறேன்...!

    அருமையான இரு பதிவுகள்.கிட்டத்தட்ட சுவிஸ்ன் நிலைமையும் இதேதான்.படிப்பும் வேலையும் எல்லாருக்குமே பொதுவாகக் கிடைக்கும்.ஏற்றத் தாழ்வு கிடையாது.முக்கி முக்கிப் பின்னுரை,முன்னுரை,பொழிப்புரையென்று பாடமாக்கி 99%புள்ளி எடுப்போம்.வேலைக்கும் அதுக்கும் சம்பந்தமே இருக்காது.

    இங்கு 15-16 வயதிலேயே ஒரு வேலைக்குண்டான தகுதையப் பெற்றுவிடுகிறார்கள்.அதன் பின் விரும்பினால் வேலை செய்துகொண்டே மேற்படிப்பைத் தொடர்கிறார்கள்.அதேநேரம் வாழ்வையும் சந்தோஷமாக்கிகொள்கிறார்கள்.இங்கு படிக்கும் எங்கள் பிள்ளைகளும் அதிஷ்டசாலிகள்.இந்த நாட்டுப் பிள்ளைகளைவிட எங்கள் பிள்ளைகள் கெட்டித்தனமகப் படித்து நல்ல நல்ல இடங்களில் தரமாக வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.இதுவும் சந்தோஷம்.அகதியாக வெளிக்கிட்ட எங்களுக்கு இதுவென்றாலும் நிம்மதியான விஷயம்.தொடரட்டும் அடுத்த பாகம் !

    ReplyDelete
  27. //ஆஸ்திரேலியாவில் உழைப்புக்குத்தான் மதிப்பே தவிர அவன் படித்தவனா இல்லையா என்பதில் இல்லை. அதேபோல் என்ன வேலை பார்க்கிறாய் என்பது பிரச்சனை இல்லை. வேலை பார்க்கிறாயா என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் ஒரு கட்டுமானப் பொறியாளரும், உணவகத்தில் எடுபிடிவேலை செய்பவரும் திருமணம் செய்துகொள்ள முடிகிறது. ஒரே பள்ளியில் மருத்துவரின் பிள்ளையும், தச்சரின் பிள்ளையும், சாலைப்பணியாளரின் பிள்ளையும் ஒன்றாகப் படிக்க முடிகிறது. வீட்டில் சகல வசதிகளையும் அனுபவிக்க முடிகிறது. காரணம், உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதையும், அதற்கேற்ற வருமானமும்.//
    ஐரோப்பிய நாடுகளிலும் இதே நடைமுறைதான் காணப்படுகின்றது.இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம்...உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைப்பதால் தொழில்ரீதியான ஏற்றத் தாழ்வுகளோ, அதன் மூலம் ஏற்படும் சாதீயச் சாக்கடைகளையும் இங்கே காணமுடியாது

    ReplyDelete
  28. Anonymous said...

    \\திரு. ராம்ஜி,

    எத வெச்சு, இப்படி சொல்றீங்க. எதாவது குறிப்பான சம்பவம் இருக்கா.
    இந்தியன் Media-லெ ஆஸ்ட்ரல்யா பத்தி சொல்ரத வெச்சு முடிவு பண்ணாதீங்க.
    நாங இங்க தான் ரொம்ப வருஷமா இருக்கொம்...
    இங்க இருக்க Indiansவிட, நீங்க சொல்ற பண்புல, குணத்துல, பாசத்துல , ஆஸ்ட்ரல்யா மக்கள் எவ்வளவொ தேவல...
    நல்லா பழகுவாங்க .. உதவி செய்வாங்க \\

    வாங்க, வணக்கம். நீங்கள் சொல்வது உண்மைதான். அடிப்படையில் பழகுவதற்கு இனிமையானவர்கள் ஆஸ்திரேலியர்கள். தவறுகளை மறைத்து விடும் ஊடகங்களால் தவறான புரிதல்கள் பல இடங்களிலும் நிகழ்ந்துவிடுவது வருத்தமான விஷயம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  29. Vetrimagal said...

    \\மிகவும் சிந்திக்க வைத்து விட்டீர்கள்.
    நம் நாட்டில் சிந்திக்கும் பழக்கம் அதிகம் இல்லாததால் கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது ;-)

    அருமையான பதிவு.\\

    வாங்க வெற்றிமகள். நாம் சிந்திக்க நேரமில்லாமல் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  30. வை.கோபாலகிருஷ்ணன் said...

    \\சிந்திக்க வைக்கும் சிறப்பான தகவல்கள். உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதையும், அதற்கேற்ற வருமானமும்.
    நினைக்கவே இனிமையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\\

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வை.கோ. சார்.

    ReplyDelete
  31. @ ஸ்ரவாணி,

    தங்கள் தொடர் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ச்சி ஸ்ரவாணி. தொடர்ந்து எழுதும் ஊக்கம் பெறுகிறேன் உங்கள் வரிகளால். நன்றி.

    ReplyDelete
  32. சொ.ஞானசம்பந்தன் said...

    \\அடேயப்பா ! எத்தனை விதப் பாடங்கள் ! விரும்பியதைத் தேந்தெடுக்க எத்தனை வாய்ப்புகள் ! நம் நாட்டில் சில பாடங்கள் மட்டுமே . அவற்றிலும் நினைவாற்றலுக்கே முதன்மை இடம் . அந்த நிலையை நாம் எய்த 200 ஆண்டுகள் ஆகலாம் .\\

    கல்வித்துறையில் இருந்த தங்களது அனுபவ வார்த்தைகளை ஏற்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  33. @ ஹேமா,

    வாங்க ஹேமா, என் பதிவுகள் பல வலைப்பூக்களில் அப்டேட் ஆகவில்லை. எனக்கும் காரணம் தெரியவில்லை.

    புலம்பெயர்ந்த நிலையில் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் கல்வி வசதி கண்டு பூரிக்கும் மனம் கண்டு நானும் மகிழ்கிறேன் ஹேமா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  34. @ தமிழன்பன்,

    தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

    ReplyDelete
  35. கீதா மேடம்,

    சிறப்பான கட்டுரை. சில ஆலோசனைகள் மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete
  36. மிக மிக அருமையான பதிவு
    இத்தனை தெளிவாக விரிவாக அழகாக
    கல்விச் சூழல் குறித்த அறிமுகத்துடனும்
    பாடத்திட்டத்துடனும் ஒப்பீட்டுடனும்
    சரியான விமர்சனத்துடனும் அதீத
    அக்கறையுடன் பதிவைத் தந்தமைக்கு
    மனமர்ந்த நன்றி
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்
    (அப்ப்டியே பள்ளிப் படிப்பு முடிந்ததும்
    பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழ
    மன ரீதியாக எப்படித் தயாராகிறார்கள் என்பது குறித்தும்
    ஒரு விரிவான பதிவு கொடுத்தீர்கள் ஆயின் அவர்கள்
    சமூகச் சூழல் மற்றும் குடும்பச் சூழலை தெளிவாக
    புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்)

    ReplyDelete
  37. மிக மிக அருமையான பதிவு
    இத்தனை தெளிவாக விரிவாக அழகாக
    கல்விச் சூழல் குறித்த அறிமுகத்துடனும்
    பாடத்திட்டத்துடனும் ஒப்பீட்டுடனும்
    சரியான விமர்சனத்துடனும் அதீத
    அக்கறையுடன் பதிவைத் தந்தமைக்கு
    மனமர்ந்த நன்றி
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்
    (அப்ப்டியே பள்ளிப் படிப்பு முடிந்ததும்
    பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழ
    மன ரீதியாக எப்படித் தயாராகிறார்கள் என்பது குறித்தும்
    ஒரு விரிவான பதிவு கொடுத்தீர்கள் ஆயின் அவர்கள்
    சமூகச் சூழல் மற்றும் குடும்பச் சூழலை தெளிவாக
    புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்)

    ReplyDelete
  38. Thought provoking.succinctly written.Well said.Just returned from Melbourne and had a first hand experience about school admissions and shared it in my blog,too.Best wishes..keep posting,,many regards.

    ReplyDelete
  39. @ சத்ரியன்,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @ ரமணி சார்,

    தங்கள் ஆழமான விமர்சனம் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களின் தொடர்வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    தங்கள் ஆலோசனைப்படி, பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து வாழ்வது குறித்தும் தகவல்கள் திரட்டி விரைவில் பதிவிடுகிறேன்.

    @ Kalidoss Murugaiya

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி காளிதாஸ் சார்.

    ReplyDelete
  40. கல்வி அழகு,ஆனால் 18 வயதிற்கு பின் அங்கு நிகழ்வது நம்மால் அவ்வளவு எளிதில் ஏற்றுவிட முடியாது.நரகத்தில் இருந்தாலும் மனம் சுபம் எனில் நரகமும் சொர்க்கமே.

    ReplyDelete
  41. australian educational system brings equality to all

    ReplyDelete
  42. கருத்துக்கு நன்றி ஆச்சி. அடுத்தப் பதிவில் இன்னும் விளக்கமாக சொல்ல இருக்கிறேன். படித்துக் கருத்திடுங்கள்.

    ReplyDelete
  43. கருத்துக்கு நன்றி அருள். வேலைவாய்ப்புகள் சமமாக இருப்பதால்தான் கல்வியைப் பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.

    ReplyDelete
  44. வெளிநாட்ல நல்ல விஷயங்கள் இருக்கு என்பதை 'தெகிரியமா ' சொல்லியிருக்கிங்க . வாழ்த்துக்கள்.
    கனவுகள் திணிக்கப்பட்டு திணிக்கப்பட்டு,சுயமான ஒரு மனிதனை உருவாகுவதற்கு பதிலாக 'ஒட்டுண்ணி ' மனிதர்களையே இன்னும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். நாமும் ,நமது அரசும் காலனி ஆதிக்க மனப்பான்மையோடு இன்னும் இருப்பதே கூட காரணமாய் இருக்கலாம் .
    //நம் நாட்டில் இந்த நிலை இல்லையென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டும்//- ஆனா இதோட அர்த்தம் தான் எனக்கு புரியல .
    இந்த பதிவு ஒரு சிலரையாவது 'தற்பெருமை ' ஐ தள்ளிவைத்துவிட்டு 'சுய ஆய்வு ' செய்ய தூண்டும் என்பது உறுதி .

    ReplyDelete
  45. @முரசொலி மாறன்.V

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    தங்கள் சந்தேகத்துக்கான என் விளக்கம்...

    பதினெட்டு வயதானதும் பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து தம் விருப்ப வாழ்க்கை வாழ்வதும், பெற்றவர்களும் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வதுமான சூழ்நிலை இங்கே பொருந்திவரலாம். ஆனால் நம் நாட்டில் பொருந்தாது அல்லவா? அதையே அங்கு அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.