பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களா? 7 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களா? இதோ, அவர்களுடைய கற்பனைச் சிறகை விரிக்க களம் அமைத்துக்கொடுக்கிறது சுட்டி உலகம்.
குழந்தைக்
கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டும் குழந்தைகள் தினத்தை
முன்னிட்டும் சுட்டி உலகம், எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப்
சிறுவர் உலகத்துடன் இணைந்து 7-15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்க்கான கதைப்போட்டி
ஒன்றை நடத்துகிறது.
கதையார்வமும்
கற்பனைத்திறமும் மிக்க குழந்தைகள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள். பரிசுகளோடு இளம்கதாசிரியராய்
சிறார் இலக்கிய உலகில் அடையாளம் காணப்படுவதற்கும் அற்புதமான வாய்ப்பு.
பெற்றோர்களே..
உங்கள் குழந்தைகளின் கதை எழுதும் திறமையை வெளிக்கொணர உதவுங்கள். போட்டி குறித்த மேலதிக
விவரங்களை சுட்டி உலகம் இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
போட்டிக்கான
கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
நல்ல விஷயம் கீதா. நான் உங்கள் தளத்தின் இந்தச் சுட்டியை என் வட்டத்தில் பகிர்ந்துள்ளேன். ஆனால் என்ன ஒரு வருத்தமான விஷயம் என்றால் அந்த வட்டத்தில் 99 விழுக்காடு குழந்தைகள் தமிழ் பேசுவதில்லை எழுதுவதில்லை. தமிழில்தான் இருக்க வேண்டும் இல்லையா?
ReplyDeleteஎன்றாலும் பகிர்ந்துள்ளேன்.
மிக்க நன்றி
கீதா
பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா. தமிழில் குழந்தைகள் எழுதுவதற்கான பயிற்சியை ஊக்குவிக்கும் போட்டி இது. எனவே தமிழில்தான் இருக்கவேண்டும். பிழைகள் பிரச்சனை இல்லை. தமிழ் பேசத்தெரிந்த குழந்தைகள் சொல்லும் கதைகளைத் தட்டச்சு செய்வதில் பெற்றோர் உதவலாம்.
Delete